Skip to main content

Tamilnadu Rainfall data -2020

(Posted on 02-01-2020) Tamilnadu Weather Blog

தமிழக மழைப்பொழிவு -2020 

தமிழகத்தை பொறுத்தவரை குளிர்கால மழை  கோடைகாலமழை தென்மேற்கு பருவமழை  வடகிழக்கு பருவமழை என நான்கு பருவமழை காலங்களில் தமிழகம்  மழை பெறுகிறது. கடந்த ஆண்டு தமிழகம் பெற்ற மழை அளவு குறித்து ஒரு ஆய்வு 

குளிர்கால மழை -2020 

ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய 2 மாதங்கள் தமிழகத்திற்கு குளிர்காலம் ஆகும். இந்த காலக்கட்டத்தில் தமிழகம் சராசரியாக 27.9 மிமீ மழை பெறும்.கடந்த ஆண்டு குளிர் காலத்தில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களை தவிர மற்ற எல்லா மாவட்டங்களிலும் மழை பற்றாக்குறையை சந்தித்தது. 

கோடை கால மழை -2020 

மார்ச் ஏப்ரல் மே ஆகிய மூன்று மாதங்கள் தமிழகத்திற்கு கோடைகாலம் ஆகும். இந்த காலக்கட்டத்தில் தமிழ்நாட்டிலே மிக அதிக மழை பெய்யும் மாவட்டம் கன்னியாகுமரி.  ஒட்டு மொத்த தமிழகத்தை எடுத்து கொண்டால் கோடைகாலத்தில் சராசரியாக 126.4 மிமீ மழை பொழிகிறது. ஆனால் கடந்த ஆண்டு தமிழகத்தில் 75.7 மிமீ மழை மட்டுமே பதிவானது .இது 40% பற்றாக்குறை.  அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தை தவிர மற்ற எல்லா மாவட்டங்களிலும் மழை பற்றாக்குறை. 

கோடைகாலத்தில் கன்னியாகுமரி மாவட்டம் -267.7 மிமீ பதிவாகியுள்ளது.

தென் மேற்கு பருவமழை -2020 

ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலம்.  இந்த காலக்கட்டத்தில் தமிழகம்  342 மிமீ மழை பெறும். ஆனால் கடந்த ஆண்டு 421.4 மிமீ மழை பதிவானது .இது இயல்பை விட 24 % மழை அதிகம்.

 கடந்த ஆண்டு  தென்மேற்கு பருவமழை காலத்தில் அதிகம் மழை பெய்த மாவட்டங்கள் :

1.நீலகிரி -1373 மிமீ
2.கோயம்புத்தூர் -1112 மிமீ
3.வேலூர் -598.1 மிமீ
4.சேலம் -560 மிமீ
5.கன்னியாகுமாரி -504.6 மீமீ

தேவாலா சின்னகல்லாறு வால்பாறை கோதையாறு ஆகிய பகுதிகள் அதிகம் மழையை பெற்றது.
தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் மழை மிக குறைவாக பெய்த மாவட்டம் தூத்துக்குடி. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த மாவட்டம் நீண்ட நாட்களாக மழை இல்லாமல் இருந்தது. 
வடகிழக்கு பருவமழை -2020 

அக்டோபர் முதல் டிசம்பர் வரை தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். இந்த காலக்கட்டத்தில் தமிழகம் 450 மிமீ மழை பெறும் .ஆனால் 477 மிமீ மழையை தமிழகம் பெற்றது . 

வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் அதிகம் மழை பெய்த முதல் 5 மாவட்டங்கள் :

சென்னை - 1041 மிமீ
நாகப்பட்டினம் -1038 மிமீ
கடலூர் -946 மிமீ
திருவாரூர் -834 மிமீ
செங்கல்பட்டு -830 மிமீ


வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் மிக அதிகம் மழை பெய்த இடங்கள் :

1.ஊத்து (திருநெல்வேலி) -2640மிமீ
2.நாலுமுக்கு (திருநெல்வேலி) -1986 மிமீ
3.மாஞ்சோலை  (திருநெல்வேலி) -1668மிமீ
4.DGP அலுவலகம் (சென்னை)-1543 மிமீ
5.பரங்கிப்பேட்டை (கடலூர் )-1341 மிமீ
6.கடலூர் -1323 மிமீ

வடகிழக்கு பருவ மழை காலத்தில் இந்தியாவிலேயே மிக அதிக மழை பெய்யும் பட்டியலில் முதல் மூன்று இடத்தை திருநெல்வேலி மாவட்டம் பெற்றுள்ளது. ஊத்து நாலுமுக்கு மாஞ்சோலை. 

வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டிலேயே மிக குறைவான மழையை பெற்ற இடங்கள் :

1.வெண்ட் வொர்த் தேயிலை எஸ்டேட் (Harison malayalam limited)
(நீலகிரி) -78 மிமீ
2.பர்வுட் எஸ்டேட் ( நீலகிரி )-78 மிமீ
3.களியல் (கன்னியாகுமரி) -79 மிமீ
4.மசினக்குடி (நீலகிரி)- 85 மிமீ
5.கிருஷ்ணகிரி -90 மிமீ
6.தாளவாடி (ஈரோடு )- 105 மிமீ
7.அன்னூர் (கோயம்புத்தூர்) -107 மிமீ

கன்னியாகுமரி ஈரோடு கோவை திருச்சி நீலகிரி திருச்சி சேலம் நாமக்கல் கரூர் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் மழை பற்றாக்குறையை சந்தித்தது. 

கன்னியாகுமரி கோவை மழை பற்றாக்குறையை சந்தித்தாலும் மற்ற பருவகாலங்களில் நல்ல மழையை பெற்றுள்ளது அதாவது  ஆண்டு மழைப்பொழிவு 1000 மிமீ தாண்டி சாதனைப் படைத்துள்ளது. 

ஆண்டு மழைப்பொழிவு -2020 

கடந்த ஆண்டு தமிழகத்தில் ஒவ்வொரு பருவகாலங்களில் தமிழகம் எந்தளவு மழையை பெற்றது என்பது குறித்து பார்த்தோம் தற்போது ஆண்டு மழைப்பொழிவை பார்ப்போம். 

கடந்த 2020 ம் ஆண்டு தமிழகத்தில் அதிகம் மழை பதிவான முதல் 10 மாவட்டங்கள் (Jan 1-Dec 31)

1.நீலகிரி -1885 மிமீ 
2.கோயம்புத்தூர் -1585 மிமீ
3.சென்னை -1572 மிமீ
4.நாகப்பட்டினம் -1420 மிமீ
5.கடலூர் -1323 மிமீ
6.திருவாரூர் -1304 மிமீ
7.திருவள்ளூர் -1229 மிமீ
8-விழுப்புரம் -1137 மிமீ
9-சிவகங்கை -1112 மிமீ
10-பெரம்பலூர் -1102மிமீ

கடந்த 2020 ம் ஆண்டு தென் மாவட்டங்களில் மிக அதிகமான மழையை பெற்று சிவகங்கை மாவட்டம் முதலிடம் (1112 மிமீ மழை)  .இரண்டாவதாக குமரி மாவட்டம் 1100 மிமீ மழையை பெற்றுள்ளது.

வேலூர் மற்றும் அரியலூர் மாவட்டமும் 1000 மிமீ தாண்டி மழை பதிவாகியுள்ளது. அதாவது கடந்த ஆண்டு தமிழகத்தில் 13 மாவட்டங்கள் 1000 மிமீ க்கு மேல் மழையை பெற்றுள்ளது.  

நன்றி 

T.Raja M.Sc.,M.Ed.,M.Phil (Tamilnadu Weather Blog) 

#TamilNaduWeather #chennai #coimbatore #madurai. #tamilnadu #weatherupdate #rainfalldata

Comments

Popular posts from this blog

இந்தியாவில் காற்றின் தரம்:

தற்போது நாடு முழுவதும் வாகனங்கள் இயங்கவில்லை. மக்கள் எல்லாமே வீடுகளில் இருக்கிறார்கள். தற்போது இயற்கை எல்லாமே மிக சந்தோசமாக இருக்கிறது. அறிவியல் பூர்வமான பதிவு. டெல்லி போன்ற வட மாநிலங்களில் காற்றின் மாசுபாடு மிக அதிகம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது வாகனங்கள் இயங்காததால் நம் நாட்டில் காற்றின் தரம் நன்றாக உள்ளது காற்றின் மாசுபாடு அதிகளவு குறைந்துள்ளது.இந்தளவுக்கு அடியோடு குறைந்துள்ளது என்பது ஆச்சர்யமான ஒன்று. தற்போது உலகம் முழுவதும் இயற்கை தன்னை புதுப்பித்து கொள்கிறது. இந்த நிலை எப்போதும் இருக்க வேண்டும். மலைப்பகுதியில் வாகனப் போக்குவரத்து இல்லாததால் அங்கும் வன விலங்குகள் சுதந்திரமாக உள்ளனர். Source: Indian Air Quality Index சுற்றுசூழல் விழிப்புணர்வு பதிவு: காடுகள்தான் நம் தாய்திருநாட்டின் விலை மதிக்க முடியாத செல்வம் ஒரு நாளில் தொழிற்சாலைகளும், மனிதர்களும், விலங்குகளும் வெளிவிடும் கார்பன்டைஆக்சைடு முழுவதையும் உறிஞ்சிக் கொள்ளும் அளவிற்கு உலகத்தில் மரங்களின் எண்ணிக்கை இல்லை. நாம் தான் நமது சுயத்தேவைகளுக்காக, லாப நோக்கத்திற்காக, அறியாமையின்  காரணமா...

World forestry day 2020

பூமியை பல வகையில் பாதுகாத்து வரும் பசுமை போர்வையாம் காடுகள் பற்றியும் அதன் வளம் காப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஓர் தினமாக இந்நாள் சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. காடு என்பது பல்வேறு உயிரினங்கள் ஒன்றிணைந்து அமையப்பெற்ற ஓர் சுழல் மண்டலமாகும். பல அரிய வகை மரங்களையும், ஏராளமான விலங்குகளையும் கொண்ட இயற்கை வரம்தான் காடு. பூமியின் மொத்த பரப்பளவில் 30 சதவீதம் காடுகளாலேயே அமைந்ததாகும். காடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஒரு முக்கியக் காரணியாக விளங்குகின்றன. உலகத்திற்கு தேவையான மழையையும், சுத்தமான காற்றையும் வழங்குவதில் காடுகளின் பங்கு மிக மிக முக்கியமானது. உலகெங்கும் சூழ்ந்துள்ள காடுகள் அதனதன் தட்பவெட்ப நிலைக்கேற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஊசியிலை காடுகள், சதுப்பு நில காடுகள், இலையுதிர் காடுகள், வெப்ப மண்டல காடுகள் என பல வகையில் அவைகள் பிரிக்கப்பட்டாலும் எல்லா காடுகளும் ஒருசேர்ந்த ஓர் முக்கிய பணியையே செவ்வனே செய்கிறது. அது புவிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை சுவாசித்து பூமிக்கு தேவையான ஆக்சிஜனை வெளியிடுவதுதான். ஒரு மரமானது ...

மாலை நேர சிறப்பு வானிலை அறிக்கை:

தற்போது கடந்த சிலநாட்களாக தமிழகம் முழுவதும் கோடைகாலம் போல வெயில் அதிகமாக நிலவி வருகிறது. அதனால் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கனமழையை பொறுத்தவரை சிவகங்கை மதுரை விருதுநகர் திருச்சி சேலம் தர்மபுரி பெரம்பலூர் கரூர் நாமக்கல் புதுக்கோட்டை ஈரோடு கரூர் இராமநாதபுரம் தர்மபுரி திண்டுக்கல் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கோவில்பட்டி எட்டயபுரம் ஆகிய பகுதியில் நாளை மழை பெய்யும்.தற்போது கோவில்பட்டியில் கனமழை.