தென்னகத்தின் ஊட்டி -மாஞ்சோலை: தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய மலை மழை பிரதேசம் மாஞ்சோலை ஆகும். தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மிக அதிக மழை பெறும் பகுதி சின்னகல்லாறு. ஆனால் வடகிழக்கு பருவமழை காலத்தில் இந்தியநாட்டிலே மிக அதிகம் மழை பெறும் பகுதி மாஞ்சோலை ஆகும். குளிர் காலமான ஜனவரி பிப்ரவரி மாதத்திலும் இந்தியாவில் மிக அதிகம் மழை பெறும் பகுதியும் மாஞ்சோலைதான். ஜனவரி பிப்ரவரி மாதத்தில் மாஞ்சோலை 1000 மிமீ வரை மழை பொழிகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் 2500 மிமீ வரை மழை பொழிகிறது . இது போக தென்மேற்கு பருவமழை காலத்திலும் தமிழகத்தில் அதிகம் மழை பெய்யும் பகுதிகளுள் மாஞ்சோலையும் ஒன்று. உலகில் மிக அதிகம் மழை பெய்யும் மௌசின்ராம் மற்றும் சிரபுஞ்சி ஆகிய பகுதிகளை பின்னுக்கு தள்ளி ஆண்டுக்கு 5 மாதங்கள் மாஞ்சோலைதான் முதலிடத்தில் இருக்கிறது. சில சமயங்களில் மாஞ்சோலையில் இரண்டு மூன்று நாட்கள் பெய்யும் மழைதான் மற்ற ஊரில் ஒராண்டு மழைப்பொழிவாக உள்ளது. 2007 ஆம் ஆண்டு ஐந்தே நாட்களில் 1043 மிமீ மழை மாஞ்சோலையில் பெய்துள்ளது. இப்படி பலநேரங்க...
நமது இணையதளத்தில் சுற்று சூழல் விழிப்புணர்வு மற்றும் வானிலை தொடர்பான பதிவுகள் வெளியிடப்படும்.