Skip to main content

தென்னகத்தின் ஊட்டி மாஞ்சோலை:

தென்னகத்தின் ஊட்டி -மாஞ்சோலை:

தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய மலை மழை பிரதேசம் மாஞ்சோலை ஆகும். 

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மிக அதிக மழை பெறும் பகுதி சின்னகல்லாறு.  ஆனால் வடகிழக்கு பருவமழை காலத்தில் இந்தியநாட்டிலே மிக அதிகம் மழை பெறும் பகுதி மாஞ்சோலை ஆகும். 

குளிர் காலமான ஜனவரி பிப்ரவரி மாதத்திலும் இந்தியாவில் மிக அதிகம் மழை பெறும் பகுதியும் மாஞ்சோலைதான். ஜனவரி பிப்ரவரி மாதத்தில் மாஞ்சோலை 1000 மிமீ வரை மழை பொழிகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் 2500 மிமீ வரை மழை பொழிகிறது .

இது போக தென்மேற்கு பருவமழை காலத்திலும் தமிழகத்தில் அதிகம் மழை பெய்யும் பகுதிகளுள் மாஞ்சோலையும்  ஒன்று. 

உலகில் மிக அதிகம் மழை பெய்யும் மௌசின்ராம் மற்றும் சிரபுஞ்சி ஆகிய பகுதிகளை பின்னுக்கு தள்ளி ஆண்டுக்கு 5 மாதங்கள் மாஞ்சோலைதான் முதலிடத்தில் இருக்கிறது.

சில சமயங்களில் மாஞ்சோலையில் இரண்டு மூன்று நாட்கள் பெய்யும் மழைதான் மற்ற ஊரில் ஒராண்டு மழைப்பொழிவாக உள்ளது. 

2007 ஆம்  ஆண்டு ஐந்தே நாட்களில் 1043 மிமீ மழை மாஞ்சோலையில் பெய்துள்ளது. இப்படி பலநேரங்களில் நடந்துள்ளது. பிறபகுதிகளில் ஓராண்டு பெய்யும் மழையை மாஞ்சோலை இரண்டே நாளில் பெற்றுவிடும் அந்தளவு சிறப்பை பெற்ற மாஞ்சோலையின் மழை பட்டியலை வெளியிட்டுள்ளேன். 

2000-2010 ஆகிய 11 ஆண்டு மழை சாதனையை பதிவிட்டுள்ளேன். 2011-19 ம் ஆண்டுக்கான மழை பொழிவு தற்போதுதான் சேகரித்து வருகிறேன்.அதனால்தான் வெளியிடவில்லை. மாஞ்சோலை மலையில் உள்ள காக்காச்சி ஊத்து குதிரைவெட்டி ஆகிய பகுதிகளிலும் அதிகளவு மழை பதிவாகும் அந்த அளவுகள் பின்னர் பதிவிடுகிறேன். 

(High Impact weather event ) Highest 24 hours Rainfall in Manjolai 

446 mm at Manjolai (Tirunelveli)   on 27 Dec 2000

220 mm at Manjolai (Tirunelveli)   on 22 Dec 2001

255 mm at Manjolai (Tirunelveli)   on 30 Oct 2002

337 mm at Manjolai (Tirunelveli)   on 19 Nov 2002

231 mm at Manjolai (Tirunelveli)   on 06 Oct 2003

232 mm at Manjolai (Tirunelveli)   on 12 June 2004

201 mm at Manjolai (Tirunelveli)   on 13 June 2004

210 mm at Manjolai (Tirunelveli)   on 20 Oct 2004

244 mm at Manjolai (Tirunelveli)   on 12 Nov 2004

406 mm at Manjolai (Tirunelveli)   on 04 April 2005

393 mm at Manjolai (Tirunelveli)   on 11 Dec 2005

295 mm at Manjolai (Tirunelveli)   on 03 Nov 2006

313 mm at Manjolai (Tirunelveli)   on 05 Nov 2007

250 mm at Manjolai (Tirunelveli)   on 28 Nov 2007

260 mm at Manjolai (Tirunelveli)   on 14 Dec 2007

301 mm at Manjolai (Tirunelveli)   on 18 Dec 2007

313 mm at Manjolai (Tirunelveli)   on 05 Nov 2009

258 mm at Manjolai (Tirunelveli)   on 06 Nov 2009

430 mm at Manjolai (Tirunelveli)   on 09 Jan 2010

   Source: Indian Meteorological department chennai

Comments

Popular posts from this blog

இந்தியாவில் காற்றின் தரம்:

தற்போது நாடு முழுவதும் வாகனங்கள் இயங்கவில்லை. மக்கள் எல்லாமே வீடுகளில் இருக்கிறார்கள். தற்போது இயற்கை எல்லாமே மிக சந்தோசமாக இருக்கிறது. அறிவியல் பூர்வமான பதிவு. டெல்லி போன்ற வட மாநிலங்களில் காற்றின் மாசுபாடு மிக அதிகம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது வாகனங்கள் இயங்காததால் நம் நாட்டில் காற்றின் தரம் நன்றாக உள்ளது காற்றின் மாசுபாடு அதிகளவு குறைந்துள்ளது.இந்தளவுக்கு அடியோடு குறைந்துள்ளது என்பது ஆச்சர்யமான ஒன்று. தற்போது உலகம் முழுவதும் இயற்கை தன்னை புதுப்பித்து கொள்கிறது. இந்த நிலை எப்போதும் இருக்க வேண்டும். மலைப்பகுதியில் வாகனப் போக்குவரத்து இல்லாததால் அங்கும் வன விலங்குகள் சுதந்திரமாக உள்ளனர். Source: Indian Air Quality Index சுற்றுசூழல் விழிப்புணர்வு பதிவு: காடுகள்தான் நம் தாய்திருநாட்டின் விலை மதிக்க முடியாத செல்வம் ஒரு நாளில் தொழிற்சாலைகளும், மனிதர்களும், விலங்குகளும் வெளிவிடும் கார்பன்டைஆக்சைடு முழுவதையும் உறிஞ்சிக் கொள்ளும் அளவிற்கு உலகத்தில் மரங்களின் எண்ணிக்கை இல்லை. நாம் தான் நமது சுயத்தேவைகளுக்காக, லாப நோக்கத்திற்காக, அறியாமையின்  காரணமா...

World forestry day 2020

பூமியை பல வகையில் பாதுகாத்து வரும் பசுமை போர்வையாம் காடுகள் பற்றியும் அதன் வளம் காப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஓர் தினமாக இந்நாள் சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. காடு என்பது பல்வேறு உயிரினங்கள் ஒன்றிணைந்து அமையப்பெற்ற ஓர் சுழல் மண்டலமாகும். பல அரிய வகை மரங்களையும், ஏராளமான விலங்குகளையும் கொண்ட இயற்கை வரம்தான் காடு. பூமியின் மொத்த பரப்பளவில் 30 சதவீதம் காடுகளாலேயே அமைந்ததாகும். காடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஒரு முக்கியக் காரணியாக விளங்குகின்றன. உலகத்திற்கு தேவையான மழையையும், சுத்தமான காற்றையும் வழங்குவதில் காடுகளின் பங்கு மிக மிக முக்கியமானது. உலகெங்கும் சூழ்ந்துள்ள காடுகள் அதனதன் தட்பவெட்ப நிலைக்கேற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஊசியிலை காடுகள், சதுப்பு நில காடுகள், இலையுதிர் காடுகள், வெப்ப மண்டல காடுகள் என பல வகையில் அவைகள் பிரிக்கப்பட்டாலும் எல்லா காடுகளும் ஒருசேர்ந்த ஓர் முக்கிய பணியையே செவ்வனே செய்கிறது. அது புவிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை சுவாசித்து பூமிக்கு தேவையான ஆக்சிஜனை வெளியிடுவதுதான். ஒரு மரமானது ...

மாலை நேர சிறப்பு வானிலை அறிக்கை:

தற்போது கடந்த சிலநாட்களாக தமிழகம் முழுவதும் கோடைகாலம் போல வெயில் அதிகமாக நிலவி வருகிறது. அதனால் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கனமழையை பொறுத்தவரை சிவகங்கை மதுரை விருதுநகர் திருச்சி சேலம் தர்மபுரி பெரம்பலூர் கரூர் நாமக்கல் புதுக்கோட்டை ஈரோடு கரூர் இராமநாதபுரம் தர்மபுரி திண்டுக்கல் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கோவில்பட்டி எட்டயபுரம் ஆகிய பகுதியில் நாளை மழை பெய்யும்.தற்போது கோவில்பட்டியில் கனமழை.